தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

​நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி ஏற்றினார்.
தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி


நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி ஏற்றினார்.

இதன்பிறகு, ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தேசிய கொடி ஏற்றியதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றத் தொடங்கினார்.

முன்னதாக, தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்பு காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பிறகு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலர் அஜய் குமார் உள்ளிட்டோர் செங்கோட்டையில் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com