தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி நிலவரம் பற்றிய தரவுகள் மாலை வெளியாகின. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,37,955 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளன. 

இதில் முதல் தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 1,01,704 பேர். இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 36,251 பேர்.

தில்லியில் இதுவரை மொத்தம் 1,19,55,198 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 85,63,920. இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர்கள் 33,91,278 பேர்.

கடந்த 24 மணி நேரத்தில் 69,160 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 25 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com