திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

மக்களவைத் தேர்தலுக்கு அனைவரும் தயாராகுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று பேசியுள்ளார். 

News image

எதிர்க்கட்சிகள் கூட்டம்

Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:28 pm IST


மக்களவைத் தேர்தலுக்கு அனைவரும் தயாராகுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று பேசியுள்ளார். 
 
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக பொதுவான வியூகத்தை வகுப்பது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆலோசனையின் போது பேசிய சோனியா காந்தி, “வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கு இப்போது இருந்தே வியூகங்களை வகுத்து எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும். தேர்தலை எதிர்கொள்ள நான் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சிந்தனையோடு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, 5 மாநில பேரவைத் தேர்தல்களில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அடுத்தடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டங்களில் ஒன்றிணைந்து மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டும்.”

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா உள்ளிட்ட 19 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாடு எதிர்கொண்டு வரும் பல்வேறு முக்கிய விவகாரங்களில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும், வரவிருக்கும் பேரவைத் தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிக்கவும் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் அங்கமாகவே இந்தக் கூட்டம் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.