ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவின் நாக்பேரான் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையும் படிக்க | கொட்டும் கனமழை: தில்லிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையும் படிக்க | பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் இன்று ஆலோசனை
பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பலியானவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.