கேரளத்தில் புதிதாக 24,296 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24,296 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 18.04 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | சென்னையில் 26ஆம் தேதி 400 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்
மேலும் 19,349 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 173 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 36,72,357 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 19,757 ஆக உயர்ந்துள்ளது.