மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக இந்தியாவையும் அச்சுறுத்தத் தொடங்கியது. ஏற்கெனவே, கர்நாடகத்தில் இரண்டு பேருக்கும், குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தன்சானியாவிலிருந்து தில்லி திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன்மூலம், அந்த மாநிலத்தில் மட்டும் ஒமைக்ரான் வகை பாதிப்பால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள மாநிலங்கள்:
- கர்நாடகம் - 2
- குஜராத் - 1
- தில்லி - 1
- மகாராஷ்டிரம் - 8
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


