ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார்.
இந்தியா - ரஷியாவிற்கு இடையேயான 21-வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகிறார்.
இச்சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு குறித்தும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று பிற்பகலில் தில்லி வரும் புதின் நேராக ஹைதராபாத் இல்லத்திற்குச் செல்ல இருக்கிறார். அங்கு பிரதமர் மோடி அவரை வரவேற்கிறார்.
மேலும் கடந்த 2019 -ஆம் ஆண்டிற்கு பின் பிரதமர் மோடியை புதின் சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.