தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மத்திய அரசு பஞ்சாபை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்: விவசாய சங்கம்

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசு பஞ்சாபை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த குர்னம் சிங் சாருனி தெரிவித்துள்ளார். 

Published On :


விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசு பஞ்சாபை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த குர்னம் சிங் சாருனி தெரிவித்துள்ளார். 

தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்தனர். ஆனால் அவர்களுக்கு மத்திய அரசு போதிய நிவாரணங்களை அறிவிக்கவில்லை. 

வேளாண் போராட்டங்களுக்கு எதிராக உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்துள்ளது. 

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காக பஞ்சாப் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளில் பாதியளவு கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு பஞ்சாபை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.