கரோனா ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியலிலிருந்து இருந்து சிங்கப்பூரை நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க வெளிநாட்டுப் பயணிகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தற்போது தொற்றின் பரவல் குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | டேஹ்ராடூனில் வீடு கட்டத் தொடங்கிய விபின் ராவத்
இந்நிலையில் கரோனா தொற்று ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இருந்து சிங்கப்பூர் நாட்டை நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி அந்நாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த கரோனா பரிசோதனை மற்றும் கட்டாயத் தனிமை உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் பின்பற்றப்பட உள்ளன.
இதையும் படிக்க | 13 பேரின் உடல்களும் தில்லி கொண்டு செல்லப்பட்டது
மேலும் கடந்த திங்கள்கிழமை கானா மற்றும் தான்சானியா உள்ளிட்ட நாடுகள் ஆபத்தான கரோனா பரவல் கொண்ட நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில் அப்பட்டியலில் இதுவரை 12 நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.