நாடாளுமன்ற தாக்குதல் தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் திங்கள்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர்.
தாக்குதல் நடைபெற்று இன்று 20ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கைய நாயுடு தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.