இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

2,000 கிமீ இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி பிரைம் ஏவுகணை; இரண்டாம் சோதனை வெற்றி

அக்னி வகைகளில் அதிநவீன புதிய தலைமுறை ஏவுகணையாக அக்னி பிரைம் திகழ்கிறது.

News image
அக்னி பிரைம் ஏவுகணை இரண்டாம் சோதனை வெற்றி
Updated On :28 ஜனவரி 2024, 5:43 am

DIN

1,000 முதல் 2,000 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை அணு ஆயுதங்களை கொண்டு தாக்கி அழிக்கும் அக்னி பிரைம் ஏவுகணையின் சோதனை வெற்றிபெற்றது. ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை அருகே இந்த சோதனை நடைபெற்றது.

இதுகுறித்து அரசு தரப்பு, "ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை அருகே நடத்தப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணையின் சோதனை வெற்றிபெற்றுள்ளது. அக்னி வகைகளில் அதிநவீன புதிய தலைமுறை ஏவுகணையாக அக்னி பிரைம் திகழ்கிறது.

1,000 முதல் 2,000 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணையில் பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஏவுகணை சோதனையானது அதன் அனைத்து பணி நோக்கங்களையும் உயர் மட்ட துல்லியத்துடன் பூர்த்தி செய்தது" என தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணையின் முதல் சோதனை கடந்த ஜூன் 28ஆம் தேதி நடைபெற்றது. அந்த வகையில், ஏவுகணை கிட்டத்தட்ட தயார் நிலையை எட்டியுள்ளது. எனவே, பாதுகாப்பு படையில் இணைத்து கொள்ளும் பணி விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தொழில்நுட்பங்களையும் திறனையும் மேம்படுத்துவதன் மூலம் ஏவுகணை திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா நடவடிக்கை எடுத்துவருகிறது. சமீபத்தில், அக்னி 5 ஏவுகணையின் சோதனை வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.