கர்நாடகத்தில் இன்று மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 24-ஆம் தேதி ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒமைக்ரான் பாதிப்பு பரவலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க | ’ஆகாசா ஏர்’ விமான சேவை நிறுவனத்தின் லோகோ அறிமுகம்
இந்தியாவில் இதுவரை 236 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கர்நாடகத்தில் இன்று மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் 5 பேர் பிரிட்டனிலிருந்து வந்தவர்கள் என்றும், நைஜீரியா, டென்மார்க், சுவிட்சர்லாந்து மற்றும் கானா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வேலூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவு
இதன்மூலம் கர்நாடக்த்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.