பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று(டிச.26) ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மின் வாலி உத்தர் மற்றும் முகமதி வாலி இடங்களில் பாதுகாப்புப் படையினர் ரூ.200 கோடி மதிப்பிலான 40 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை 13 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்திருந்த நிலையில் அடுத்தடுத்து போதைப்பொருள் கையகப்படுத்தப்பட்டதால் எல்லைப்பகுதியில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | சென்னை விமான நிலையத்தில் ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்