47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்தியாவில் மேலும் 2 கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி

இந்தியாவில் மேலும் 2 கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 டிசம்பர் 2021, 6:04 am

DIN

இந்தியாவில் மேலும் 2 கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோவிஷில்ட், கோவேக்ஸின் மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும் 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மன்சுக் மாண்டவியா டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில்,

இந்தியாவில் ஒரே நாளில் கோர்பிவேக்ஸ் மற்றும் கோவோவேக்ஸ் என்கிற கரோனா தடுப்பூசி, மால்னுபிரவிர் என்ற கரோனா சிகிச்சைக்கு உதவும் மாத்திரை ஆகிய 3 மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில், கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மூன்றாவது தடுப்பூசியாகும்.

18 வயதுக்கு மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் மால்னுபிரவிர் என்ற மாத்திரை  இந்தியாவில் உள்ள 13 நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.