47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான்

ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :29 டிசம்பர் 2021, 11:39 am

DIN


ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுபற்றி அந்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"ஆந்திரத்தில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்புக்குள்ளாகியுள்ள அனைவரும் சீராக உள்ளனர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் கண்டறியப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது."

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் அமெரிக்காவிலிருந்து திரும்பியவர்கள் இரண்டு பேர், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திரும்பியவர்கள் இரண்டு பேர். பயணம் மேற்கொண்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் மூன்று பேர். மீதமுள்ள மூன்று பேர் குவைத், நைஜீரியா மற்றும் சௌதி அரேபியாவிலிருந்து வந்தவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.