பி.எஸ்.எல்.வி. சி-51: செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்களும் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
பி.எஸ்.எல்.வி. சி-51: செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக  நிலைநிறுத்தம்
பி.எஸ்.எல்.வி. சி-51: செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்களும் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

அனைத்து செயற்கைக் கோள்களும் சூரிய ஒத்திசைவு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 உள்பட 19 செயற்கைக் கோள்கள், பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.28) காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இதற்கான கவுன்ட்டவுன் சனிக்கிழமை (பிப்.27) காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

இதில், பிரேசில் நாட்டுக்கு சொந்தமான 637 கிலோ எடையுடைய அமேசானியா-1 செயற்கைக்கோளும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தவிர இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதீஷ் சாட், சென்னை ஜேப்பியாா் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூா் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூா் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com