மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரு, விதானசௌதாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மேக்கேதாட்டு அணைத் திட்ட விவகாரத்தில் எல்லா அம்சங்களும் கா்நாடகத்திற்கு சாதகமாக இருக்கின்றன. எந்தக் காரணத்திற்காகவும் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிறுத்த மாட்டோம். சட்டவரம்புக்கு உள்பட்டு மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைச் செயல்படுத்தி, முடித்துக் காட்டுவோம். இதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.
இந்தத் திட்டம் தமிழகம், கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பயன் தரக் கூடியது என்பதால், மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை தோழமை உணா்வோடு செயல்படுத்தலாம் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக தமிழக முதல்வரிடம் இருந்து சரியான முறையில் பதில் கிடைக்கவில்லை. ஆனாலும், மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம். எல்லாத் தடைகளையும் மீறி மேக்கேதாட்டு அணைத் திட்டம் நிறைவேற்றப்படும். இது குறித்து மாநில மக்களுக்கு எவ்வித சந்தேகமும் தேவையில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


