திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பல் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்று இளைஞர் தற்கொலை

கேரள மாநிலத்தில் பல் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
பல் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்று இளைஞர் தற்கொலை
Updated On :31 ஜூலை 2021, 6:24 am

DIN


கேரள மாநிலத்தில் பல் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள கோத்தமங்கலம் அருகே நெல்லிக்குழி என்ற பகுதியில், வெள்ளிக்கிழமையன்று பல் மருத்துவம் பயின்று வந்த மாணவியை, 24 வயது நபர் சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பலியான மாணவி மானசா (24) என்பதும், கொலையாளி ராகில் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மானசா, கோத்தமங்கலத்தில் உள்ள இந்திரா காந்தி கல்லூரியில் பல் மருத்துவம் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இருவரும் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு, இந்திரா காந்தி பல் மருத்துவக் கல்லூரிக்கு அருகே நடந்துள்ளது. இருவருக்கும் இடையே இருந்த தனிப்பட்ட விரோதமே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவி, கல்லூரிக்கு அருகே ஒரு வீட்டில் பணம் கொடுத்து தங்கும் விருந்தாளியாக தங்கியிருந்த நிலையில், நேற்று அந்த வீட்டுக்குள் நுழைந்த நபர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முன்னதாக, தனது மகளை தொந்தரவு செய்வதாக, மானசாவின் பெற்றோர் ஏற்கனவே ராகில் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.