பாபா ராம்தேவிற்கு எதிராக தில்லி மருத்துவர்கள் போராட்டம்

அலோபதி மருத்துவம் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபா ராம்தேவிற்கு எதிராக தில்லி மருத்துவர்கள் போராட்டம்
பாபா ராம்தேவிற்கு எதிராக தில்லி மருத்துவர்கள் போராட்டம்
Published on
Updated on
1 min read

அலோபதி மருத்துவம் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து பாபா ராம்தேவிற்கு எதிரான பதாகைகளை ஏந்தி போறாட்டத்தில் ஈடுபட்டனர்.

அலோபதி மருந்து குறித்த விமா்சனம் தொடா்பாக யோகா குரு பாபா ராம்தேவ் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லையெனில் ரூ.1,000 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தற்போது கடைப்படிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வியடைந்துவிட்டன. அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தாலும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம். இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு, ஆயுா்வேத முறையை அமல்படுத்த வேண்டும்’ பாபா ராம்தேவ் அவா் விமா்சனம் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com