கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,471 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 75 நாள்களுக்குப் பிறகு பதிவாகம் குறைந்த பாதிப்பு அளவாகும்.
நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்த 2,726 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 1.17 லட்சம் பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்த புள்ளி விவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், புதிதாக 60,471 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, குணமடைவோர் விகிதம் 95.64 சதவீதமாகவும், கரோனா உறுதி செய்யப்படுவோர் விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக அதாவது 4.39 சதவீதமாகவும் உள்ளது.
இதையும் படிக்கலாமே.. கரோனாவின் கோரத் தாண்டவம்: பெற்றோரை இழந்து பச்சிளம் தம்பியுடன் தவிக்கும் சிறுமி
மேலும் 1,17,525 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2,82,80,472 ஆக உயர்ந்துள்ளது. 2726 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 9,13,378 பேர் நோய்த் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இதுவரை மொத்தம் 25,90,44,072 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.