மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகரிக்கும் டெங்குவால் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்க | மேற்கு வங்கம்: இரு வங்கதேச கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை
தொடர் மழையால் உருவான டெங்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில் குவாலியர் மாவட்டத்தில் 2,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அம்மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி மனிஷ் சர்மா தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிப்படியாக டெங்கு குறையும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.