திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

‘கங்கனா ரணாவத்தை கைது செய்ய வேண்டும்’: மகாராஷ்டிர அமைச்சர்

இந்திய சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரணாவத்தின் பத்ம விருதை திரும்பப் பெறுவதுடன் அவரைக் கைது செய்ய வேண்டும் என மகாராஷ்டிர அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

News image
கங்கனா ரணாவத்
Updated On :12 நவம்பர் 2021, 10:12 am

DIN

இந்திய சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரணாவத்தின் பத்ம விருதை திரும்பப் பெறுவதுடன் அவரைக் கைது செய்ய வேண்டும் என மகாராஷ்டிர அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான  கங்கனா ரணாவத் பிரபல தனியார் செய்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, இந்தியா 1947ஆம் ஆண்டு பெற்றது வெறும் பிச்சை எனவும், 2014ஆம் ஆண்டு மோடி பிரதமரான போதுதான் உண்மையில் சுதந்திரம் அடைந்தது எனவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். 

இந்திய சுதந்திரம் குறித்த கங்கனாவின் இந்தக் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கங்கனா ரணாவத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கங்கனா ரணாவத்தின் பேச்சை கடுமையாக கண்டிக்கிறேன். அவரின் கருத்து சுதந்திரப் போராட்ட வீரர்களை இழிவுபடுத்தும் செயல். மத்திய அரசு அவருக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன் அவரை கைது செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 8ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.