கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

‘பத்திரிகையாளர்கள் பெயரில் வன்முறையை தூண்ட முயற்சி’: திரிபுரா பாஜக அமைச்சர்

பத்திரிகையாளர்கள் எனும் பெயரில் திரிபுராவில் வன்முறையைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டதால் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக மாநில பாஜக அமைச்சர் தெரிவித்துள்ளது சர்ச்சையக் கிளப்பியுள்ளது. 

News image

சம்ரித்தி சகுனியா, சுவா்ண ஜா

Updated On :16 நவம்பர் 2021, 10:25 am

DIN

பத்திரிகையாளர்கள் எனும் பெயரில் திரிபுராவில் வன்முறையைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டதால் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக மாநில பாஜக அமைச்சர் தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக திரிபுராவில் வகுப்புவாதம் தொடர்பாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் ஆத்திரமூட்டும் பதிவுகளை வெளியிட்டதாக சம்ரித்தி சகுனியா, சுவா்ண ஜா ஆகிய இரு பெண் ஊடகவியலாளா்களை திரிபுரா காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்ற அனுமதியுடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் மாநில அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையாகியுள்ளது.

திங்கள்கிழமை பேசிய திரிபுரா அமைச்சர் சுஷாந்தா செளத்ரி, “கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் எனும் பெயரில் அடையாளம் காணப்பட்ட இருவரும் மாநிலத்தில் வன்முறையைத் தூண்டும் நோக்கில்  வந்த கட்சியின் பிரதிநிதியாக வந்துள்ளனர். மக்களை அரசுக்கு எதிராக தூண்டுவதே அவர்களின் பணி. அவர்கள் உண்மையில் பத்திரிகையாளர்கள் தானா என்கிற சந்தேகம் எழுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் கட்சியின் சார்பாக நடத்தப்படும் நிறுவனத்தில் பணியாற்றும் இவர்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு விடக்கூடாது எனவும் சுஷாந்தா செளத்ரி கூறியுள்ளார். அமைச்சரின் இந்தக் கருத்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.