பத்திரிகையாளர்கள் எனும் பெயரில் திரிபுராவில் வன்முறையைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டதால் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக மாநில பாஜக அமைச்சர் தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக திரிபுராவில் வகுப்புவாதம் தொடர்பாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் ஆத்திரமூட்டும் பதிவுகளை வெளியிட்டதாக சம்ரித்தி சகுனியா, சுவா்ண ஜா ஆகிய இரு பெண் ஊடகவியலாளா்களை திரிபுரா காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இதையும் படிக்க | லடாக்கில் உலகின் மிக உயரமான சாலை: இந்தியாவிற்கு கின்னஸ் சான்றிதழ்
அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்ற அனுமதியுடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் மாநில அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையாகியுள்ளது.
திங்கள்கிழமை பேசிய திரிபுரா அமைச்சர் சுஷாந்தா செளத்ரி, “கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் எனும் பெயரில் அடையாளம் காணப்பட்ட இருவரும் மாநிலத்தில் வன்முறையைத் தூண்டும் நோக்கில் வந்த கட்சியின் பிரதிநிதியாக வந்துள்ளனர். மக்களை அரசுக்கு எதிராக தூண்டுவதே அவர்களின் பணி. அவர்கள் உண்மையில் பத்திரிகையாளர்கள் தானா என்கிற சந்தேகம் எழுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | இஎஸ்ஐ மாதச் சந்தா செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
மேலும், அரசியல் கட்சியின் சார்பாக நடத்தப்படும் நிறுவனத்தில் பணியாற்றும் இவர்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு விடக்கூடாது எனவும் சுஷாந்தா செளத்ரி கூறியுள்ளார். அமைச்சரின் இந்தக் கருத்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.