இதற்கு சிபிஎஸ்இ தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா பதிலளித்து வாதாடுகையில், ‘பொதுத் தோ்வை நேரடி வழியில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தோ்வெழுத வரும் மாணவா்களிடையே சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் தோ்வு மையங்களின் எண்ணிக்கை 6,500-லிருந்து 15,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. கரோனா பரவும் அபாயத்தைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்துள்ளனா். மேலும், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு ஏற்கெனவே கடந்த செவ்வாய்க்கிழமையே தொடங்கிவிட்டது’ என்றாா்.