

தலைநகர் தில்லியில் ஒரே மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியில் நாளுக்கு நாள் நகை பறிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் நீடித்து வருகிறது.
தில்லி காவல்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
அக்டோபர் 8ஆம் தேதி முதல் நவம்பர் 11 தேதி வரையிலான கால இடைவெளியில் மட்டும் 1018 நகை பறிப்பு சம்பவங்கள் மீதான புகார்கள் பதிவாகியுள்ளன.
இதையும் படிக்க | நடிகர் கமல்ஹாசனுக்கு கரோனா பாதிப்பு!
இதே காலத்தில் கடந்த ஆண்டு இதன் எண்ணிக்கை 920ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இதே காலத்தில் 3894 வாகன திருட்டு சம்பவங்களும், 247 கொள்ளை சம்பவங்களும், 105 கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகியுள்ளன.
தில்லியில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. காவல்துறையினர் சட்டம், ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.