புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 11 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

முதல்வர் விஜய்

Published On :

கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் மேம்படுத்தும் வகையில் தேசிய அளவிலான பிரசாரத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று (ஆக. 11) தொடங்கியுள்ளார்.

ஜார்க்கண்ட்டில் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சட்டப்பேரவையை நோக்கி பேரணி சென்றனர். சட்டப்பேரவையை முற்றுகையிடச் சென்ற 110 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பங்கிப்பூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

வேலை இல்லை என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக நடிகை திவ்யா கணேசன் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டின் சிறந்த தொடராக எதிர்நீச்சல் தொடர்கிறது தொடர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை இயக்குநர் திருச்செல்வம் தனது நாயகிகளுடன் பெற்றுக்கொண்டார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான ரீல்ஸ் விடியோக்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட வகையான விடியோக்கள் மட்டும் அடிக்கடி வருகிறதா? அதனை சரி செய்துகொள்வதற்கான வழிமுறையை இன்ஸ்டாகிராம் வழங்கியுள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியில் புதிதாக கெஸ்ட் மோட் என்ற அம்சம் அறிமுகமாகவுள்ளது. இது தொடர்பான சோதனை முயற்சியில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

டைம் டிராவலிங் செய்து பார்த்து வந்தவர் என்று தன்னைத்தானே கூறிக் கொள்ளும் ஒருவரின் நேர்காணல்தான், சமூக வலைத்தளங்களில் இன்று வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளன்று, நடிகை த்ரிஷாவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், மற்றொரு பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.

விண்ணில் நிகழும் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம், புதன்கிழமை (ஆக. 12) நிகழவுள்ளது. எனினும், இந்த அற்புத நிகழ்வை இந்தியாவிலிருந்து காண இயலாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 2 வழிகளில் மழைநீரைச் சேமித்தால் காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் கையேந்த வேண்டியதில்லை என பேரவையில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசினார்.

தவெகவுக்கு சிபிஐ, வருமான வரித்துறை வழக்குகள் வரும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ. பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

மீண்டும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை என்பது விவசாயிகளுக்கும் நல்லதல்ல, நாம் பெற்ற உரிமைகளுக்கும் நல்லதல்ல - ஓபிஎஸ் 

இடம் மாறினாலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்திருக்கிறார் செங்கோட்டையன் என அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

நீங்கள் இடம்மாறி இருக்கிறீர்கள். அதற்காக துதி பாடத் தேவையில்லை என பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ஓ. பன்னீர்செல்வம் பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 11) அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்துள்ளது.

பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

'போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு' என்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் தலைமையில், மாணவர்கள் அனைவரும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

சட்டப்பேரவையில் நேற்று பேசிய கடையநல்லூர் மதிமுக எம்எல்ஏ  ராஜேந்திரன், நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை வாசிக்கும்போது தமிழில் சில சொற்றொடர்களை பேசாமல் விட்டுவிட்டார் என்றும் சில சொற்றொடரில் இலக்கண பிழை இருந்தது என்றும் கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.