நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை ஒத்திவைத்த விவசாயிகள்

திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்திருந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யும் வகையில், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை விவசாயிகள் ஒத்திவைத்துள்ளனர்.

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, விவசாயிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

முன்னதாக, போராட்டத்தை கைவிடுமாறு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளிடம் இன்று கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த வாரம், மூன்று வேளாண் திருத்த சட்டங்கள் திரும்ப பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இருப்பினும், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறைந்தபட்ச ஆதார விலை குறித்து சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு மத்தியில், திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com