புது தில்லி: நாட்டில் இதுவரை யாருக்கும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
நாட்டுக்குள் உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் நுழையாமல் தடுக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருவதாகவும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
இதையும் படிக்கலாமே.. இனி நீங்களும் பெட்ரோல், டீசலை பரிசளிக்கலாம்; மாற்றி யோசித்த இந்தியன் ஆயில் நிறுவனம்
சர்வதேச அளவில் ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடைந்திருப்பதிலிருந்து சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. துறைமுகங்களிலும் தீவிர கண்காணிப்புப் போடப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனையில் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு மரபணு வரிசைமுறையை சோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. ஒமைக்ரான் ஏற்கனவே இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம்: மருத்துவர்
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய அமைச்சர், உலகளவில் தற்போது வரை 14 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியிருக்கிறது. நாட்டில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று கூறினார்.