இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

‘பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால்...’: நவ்ஜோத் சிங் சித்து எச்சரிக்கை

கைது செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால் நாளை உத்தரப்பிரதேசத்தை நோக்கி ஒட்டுமொத்த பஞ்சாப் காங்கிரஸும் பேரணி செல்லும் என நவ்ஜோத் சிங் சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image
‘பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால்...’: நவ்ஜோத் சிங் சித்து எச்சரிக்கை
Updated On :5 அக்டோபர் 2021, 12:39 pm

DIN

கைது செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால் நாளை உத்தரப்பிரதேசத்தை நோக்கி ஒட்டுமொத்த பஞ்சாப் காங்கிரஸும் பேரணி செல்லும் என நவ்ஜோத் சிங் சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்ததுடன் கைது செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, "இந்த சம்பவத்தில் மத்திய அமைச்சரின் மகனைக் கைது செய்யாமலும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை விடுவிக்காமலும் இருந்தால் பஞ்சாப் காங்கிரஸ் லக்கீம்பூரை நோக்கி பேரணியில் ஈடுபடும்" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.