பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

உ.பி.யில் டிரக்-பேருந்து நேருக்கு நேர் மோதல்: பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு

உ.பி.யில் டிரக்-பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :7 அக்டோபர் 2021, 11:44 am

DIN

உ.பி.யில் டிரக்-பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கியில் இன்று அதிகாலை டிரக்-பேருந்து நேருக்கு நேர் மோதியது. இந்த சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள். 26 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பாரபங்கி விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும் பலியானோருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.