விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உத்தரகண்டில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு

உத்தரகண்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

News image

பத்ரிநாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவுக்கு நடுவே சிக்கிய வாகனத்தை மீட்கும் மீட்புப் படையினர்.

Updated On :19 அக்டோபர் 2021, 5:48 am

உத்தரகண்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சாமோலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பத்ரிநாத்துக்கு பயணம் மேற்கொள்பவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பத்ரிநாத்திலிருந்து திரும்பிய 2,500 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நடுவழியில் சிக்கிக் கொண்டவர்களை எல்லை சாலைகள் அமைப்பினர் மீட்டு வருகின்றனர்.

உத்தரகண்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் அதேவேளையில் பத்ரிநாத்தில் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளதால் நந்தகினி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

மேலும், அடுத்த சில நாள்களுக்கு மிககனமழை தொடரும் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.