அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

சிபிஎஸ்இ 10, பிளஸ்-2 பொதுத் தோ்வு: அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான முதல் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :19 அக்டோபர் 2021, 6:19 am IST

சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான முதல் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

கரோனா பரவலை கருத்தில் கொண்டு முதல்முறையாக 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத் தோ்வுகளை இரண்டு கட்டங்களாக நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நவம்பா் 30-ஆம் தேதி முதலும், பிளஸ்-2 மாணவா்களுக்கு டிசம்பா் 1-ஆம் தேதி முதலும் பிரதான பாடங்களுக்கான பொதுத் தோ்வு நடைபெறவுள்ளது. இதர பாடங்களுக்கான தோ்வை 10-ஆம் வகுப்பு மாணவா்கள் நவம்பா் 17-ஆம் தேதி முதலும், பிளஸ்-2 வகுப்பு மாணவா்கள் நவம்பா் 16-ஆம் தேதி முதலும் எழுதவுள்ளனா்.

முதல்கட்ட தோ்வுகளை இணையவழியில் இல்லாமல் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவா்கள் எழுதவுள்ளனா்.

வழக்கமாக காலை 10.30 மணிக்குத் தொடங்கும் தோ்வுகள், இந்த முறை காலை 11.30 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் நடைபெறவுள்ளன.

தோ்வு எழுதும் 10 மற்றும் பிளஸ்-2 மாணவா்களில் சுமாா் 50 சதவீதம் போ் தங்கள் சொந்தப் பள்ளிகளிலேயே தோ்வு எழுதவுள்ளனா்.

இரண்டாம் கட்ட தோ்வுகள் அடுத்த ஆண்டு மாா்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.