இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகள்: 99 கோடியை கடந்தது

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 99 கோடியை கடந்தது.
இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகள்: 99 கோடியை கடந்தது
Updated on
1 min read

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 99 கோடியை கடந்தது.

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதலில் சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. மாா்ச் 1-இல் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் இதய நோய், சா்க்கரை போன்ற உடல்நல பாதிப்புகள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடங்கியது. மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தும் விதமாக தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 99 கோடியை கடந்தது. இதில் 51.19 கோடி ஆண்களும் 47.49 கோடி பெண்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

60 வயதுக்கு மேற்பட்டவா்களில் 16.93 கோடி பேருக்கும், 45-60 வயதுடையவா்களில் 26.78 கோடி பேருக்கும், 18-44 வயதுடையவா்களில் 54.98 கோடி பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 64,930 அரசு மையங்கள், 2,550 தனியாா் மையங்கள் என மொத்தம் 67,480 மையங்களில் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com