பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மேற்கு வங்கத்தில் நவ.15 முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர் மம்தா

மேற்கு வங்கத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 15இல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி(கோப்புப்படம்)

Updated On :25 அக்டோபர் 2021, 10:27 am

ANI

மேற்கு வங்கத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 15-இல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொற்று படிப்படியாக குறைவதையடுத்து தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்குவங்கத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் மம்தா இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பேசுகையில்,

“9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கு நவம்பர் 15-இல் பள்ளிகள் திறக்கப்படும்.

மேலும், பஞ்சாப் அரசை போலவே நாங்களும் எல்லைப் பாதுகாப்பு படையின் எல்லை விரிவாக்கத்திற்கு எதிராக போராடி வருகிறோம். எங்கள் எல்லைப் பகுதி முழுவதும் அமைதியான சூழல் நிலவி வருகின்றன. சட்டம் - ஒழுங்கு என்பது காவல்துறையின் பணி. மாநில அரசுசின் சட்டங்களின் அடிப்படையிலேயே மாநில அரசுகள் செயல்படும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.