47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

News image
Updated On :31 அக்டோபர் 2021, 4:20 am

DIN

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கன்னடத் திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கிய ராஜ்குமாரின் இளையமகனும், முன்னணி நடிகருமான புனீத் ராஜ்குமாா் (46), வெள்ளிக்கிழமை (அக்.29) உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பால் காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் மோடி உள்பட நாடு முழுவதும் உள்ள ஏராளமானோா் இரங்கல் தெரிவித்து தெரிவித்தனர். 
புனித் ராஜ்குமாரின் உடல் பெங்களூரில் உள்ள கண்டீரவா விளையாட்டுத் திடலில் வெள்ளிக்கிழமை மாலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது ரசிகா்கள், உறவினா்கள், திரைக் கலைஞா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் நேரில் வந்து அவரது உடலுக்கு கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினா். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாா் திணறும் நிலை ஏற்பட்டது. 
வரிசையில் வராமல் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டோரை போலீஸாா் லேசான தடியடி நடத்தி கட்டுப்படுத்தினா். கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வா் எடியூரப்பா, மத்திய, மாநில அமைச்சா்கள், தெலுங்கு நடிகா்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நந்தமூரி பாலகிருஷ்ணா, நகைச்சுவை நடிகா் அலி, பிரபுதேவா, அா்ஜுன் சா்ஜா, கன்னடத் திரையுலகைச் சோ்ந்த கலைஞா்கள் அஞ்சலி செலுத்தினா். 

அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவரது மகள் திருதி, தந்தையின் உடலைக் கண்டு கதறி அழுதாா். அவருக்கு தாய் அஸ்வினி, சகோதரி வந்திதா, நடிகா் சிவராஜ்குமாா் உள்ளிட்டோா் ஆறுதல் கூறினா். இரவு முழுவதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட புனித் ராஜ்குமாரின் உடல், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 
பின்னர் வெளிவட்ட சாலையில் உள்ள கண்டீரவா ஸ்டுடியோவில் அவரது தந்தை ராஜ்குமாா், தாய் பாா்வத்தம்மா ஆகியோா் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் புனித் ராஜ்குமார் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. அதன்பிறகு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.