கேரளத்தில் புதிதாக 19,682 பேருக்கு கரோனா

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,682 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,682 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 19,682 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 53 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 18,784 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 737 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 1,21,945 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

மேலும் 152 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 24,191 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 20,510 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 43,94,476 பேர் குணமடைந்துள்ளனர்.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,60,046 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 13 சதவிகிதத்தினர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com