வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்: ராகுலுடன் முதல்வர் சரண்ஜீத் இன்று ஆலோசனை

பஞ்சாப் மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

News image

ராகுல் காந்தி

Updated On :24 செப்டம்பர் 2021, 9:34 am

பஞ்சாப் மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த திங்கள்கிழமை பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னியும், இரண்டு துணை முதல்வர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி இல்லத்தில் இன்று மாலை முதல்வர் சரண்கீத் சிங் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பின்பு விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவைக் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும், அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், அமரீந்தா் சிங்கின் எதிா்ப்பை மீறி சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கட்சித் தலைமை கடந்த ஜூலை மாதம் நியமித்தது. அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இந்தச் சூழலில், அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை கடந்த சனிக்கிழமை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.