அசாம்: கரோனாவால் 6 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அசாம்: கரோனாவால் 6 லட்சம் பேர் பாதிப்பு
அசாம்: கரோனாவால் 6 லட்சம் பேர் பாதிப்பு
Published on
Updated on
1 min read

அசாமில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில்  இதுவரை 3.45 கோடி லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கரோனாவால் அசாமில் இதுவரை 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சனிக்கிழமை (செப்-25) நிலவரப்படி புதிதாக 325 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அசாமில் கரோனா பாதிப்பு 6,00,425 ஆக  உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,838 ஆகவும் பதிவாகியிருக்கிறது.

மேலும் அசாமில் 2.33 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com