அசாமில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இதுவரை 3.45 கோடி லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கரோனாவால் அசாமில் இதுவரை 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதையும் படிக்க | இந்தியாவிலிருந்து நேரடி விமானச் சேவைக்கு கனடா அனுமதி
சனிக்கிழமை (செப்-25) நிலவரப்படி புதிதாக 325 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அசாமில் கரோனா பாதிப்பு 6,00,425 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,838 ஆகவும் பதிவாகியிருக்கிறது.
மேலும் அசாமில் 2.33 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.