காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கன்யா குமார், குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவராக அறியப்பட்டவர் கன்யா குமார். இவரும் குஜராத்தை சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக செய்திகள் வெளியாகின.
இதையும் படிக்க | 'நான்தான் சொன்னேனே': சித்து ராஜிநாமா குறித்து அமரீந்தர் ட்வீட்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் கன்யா குமார் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். ஜிக்னேஷ் மேவானி சுயேட்சை எம்எல்ஏ-ஆக இருப்பதால் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணையவில்லை என்றாலும் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக தில்லியில் உள்ள டெல்லி ஷஹீத்-இ-ஆஸம் பகத் சிங் பூங்காவில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்யா குமார் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் பங்கேற்றனர்.