ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

உச்சம் தொட்ட பெட்ரோல் விலை; தொடர் நெருக்கடியில் மக்கள்

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 101.64 ரூபாயாகவும் மும்பையில் லிட்டருக்கு 107.71 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

கோப்புப்படம்

Published On :

பெட்ரோல், டீசல் விலை இன்று நாடு முழுவதும் உச்சத்தை தொட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 30 பைசா உயர்த்தப்பட்ட நிலையில், 89.87 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல், பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 பைசா உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, தில்லியில் 101.64 ரூபாய்க்கு விற்கப்பட்டுவருகிறது.

மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 107.71 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. டீசலை பொறுத்தவரையில், தில்லியில் 89.87 ரூபாய்க்கும் மும்பையில் 97.52 ரூபாய்க்கும் விற்கப்பட்டுவருகிறது. 

உள்ளூர் வரி விகிதத்தைப் பொறுத்து மாநிலத்துக்கு மாநிலம் எரிபொருள் விலை மாறுபடும். மூன்றே வாரத்தில் பெட்ரோல் விலை இரண்டாவது முறையாகவும் டீசல் விலை ஐந்தாவது முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த விலை உயர்வின் மூலம் பெட்ரோலின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. டெல்லியில் ஜூலை மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 101.84 ரூபாயாகவும் மும்பையில் 107.83 ரூபாயாகவும் இருந்தது. 

மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு, சர்வதேச எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 78.64 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டுவருகிறது. சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (பிபிஎல்), பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் (பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் ஆகியவை பெட்ரோல், டீசல் விலைகளை செப்டம்பர் 24ஆம் தேதி மாற்றியமைத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.