காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவா பிட்ஸ் பிலானியில் 24 மாணவர்களுக்கு கரோனா

தெற்கு கோவாவில் உள்ள பிட்ஸ் பிலானி வளாகத்தில் 24 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 9:34 am

DIN

தெற்கு கோவாவில் உள்ள பிட்ஸ் பிலானி வளாகத்தில் 24 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி அர்ஜுன் ஹலர்ன்கர் கூறுகையில், 

கடந்த சில நாட்களில் கோவா பிட்ஸ் பிலானி வளாகத்தில் 24 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இன்று மேலும் எட்டு பேரின் மாதிரிகள்  பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. 

அவர்களின் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மேலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடரவும், பல்கலையில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தெற்கு கோவாவில் உள்ள பிட்ஸ் பிலானி வளாகத்தில் சுமார் 2,800 மாணவர்கள் உள்ளனர். பல்கலைக்கழகத்தில் நுழையும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2 நாட்களாக தெர்மல் ஸ்கேன் செய்யப்படுகிறது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.