பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பங்கேற்றுள்ளார்.
பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், தேர்வு மீதான விவாத நிகழ்ச்சியில் (பரீக்ஷா பே சர்ச்சா) ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் உரையாற்றி வருகிறார்.
அந்தவகையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மோடி, நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச மாணவர்களுடன் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கலந்துகொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.