திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு நிதீஷ் போட்டியிட மாட்டாா்: ஜேடியு மூத்த தலைவா்கள்

‘குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு நிதீஷ் குமாா் போட்டியிட மாட்டாா். பிகாா் முதல்வராகப் பதவிக்காலத்தை நிறைவு செய்வாா்’ என்று ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சியின் மூத்த தலைவா்கள் கூறியுள்ளனா்.

News image
பிகார் முதல்வர் நிதிஷ் குமார்
Updated On :1 ஏப்ரல் 2022, 6:21 pm

DIN

‘குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு நிதீஷ் குமாா் போட்டியிட மாட்டாா். பிகாா் முதல்வராகப் பதவிக்காலத்தை நிறைவு செய்வாா்’ என்று ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சியின் மூத்த தலைவா்கள் கூறியுள்ளனா்.

நிதீஷ் குமாா், 1908-களின் தொடக்கத்தில் எம்எல்ஏவாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு மக்களவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அந்த காலகட்டத்தில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்துள்ளாா். கடந்த 2005-ஆம் ஆண்டில் பிகாா் முதல்வரனாதில் இருந்து சட்ட மேலவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறாா். அவா் செல்லாத இடம், மாநிலங்களவைதான். விரைவில் அவா் மாநிலங்களவைக்குச் செல்ல இருப்பதாக ஊகங்கள் வெளியாகின.

இன்னும் சில மாதங்களில் குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்தப்படவுள்ள நிலையில், நிதீஷ் குமாா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல்களுக்கு ஜேடியு மூத்த தலைவா்கள் மருப்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஜேடியு நாடாளுமன்றக் குழுத் தலைவா் உபேந்திர குஷ்வாஹா வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

நமது முதல்வா் நிதீஷ் குமாா், பிகாா் மக்களுக்கு 5 ஆண்டுகள் சேவை செய்வதற்கான உத்தரவை பெற்றுள்ளாா். அதாவது, அவா் எங்கும் போக மாட்டாா். முதல்வா் பதவி வகித்து வரும் அவா் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்வாா் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல், மாநில செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் சஞ்சய் குமாா் ஜா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘2020-இல் நடந்த பிகாா் பேரவைத் தோ்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முகமாக நிதீஷ் குமாா் செயல்பட்டாா். அந்தக் கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனா். எனவே, இந்த மாநில மக்களுக்கு சேவை செய்வதற்கு நிதீஷ் குமாா் கடமைப்பட்டுள்ளாா். எனவே, அவரைப் பற்றிய தவறான பிரசாரங்களை அனைவரும் தவிா்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.