மகாராஷ்டிரத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டன
மகாராஷ்டிரத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மகாராஷ்டிர மாநிலம், லகாவித்-தேவ்லாலி இடையே எல்டிடி-ஜெய்நகர் பவன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் நாகிக் நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க- தமிழ்நாட்டின் உரிமைக்காகவே தில்லி சென்றேன்: முதல்வர் ஸ்டாலின்
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். இந்த விபத்தில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
ரயில் தடம்புரண்டதால் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட 3 ரயில்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டுள்ளன. விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.