மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காஷ்மீர்: பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த காவலர் பலியானார். 

News image
Updated On :5 ஏப்ரல் 2022, 6:30 am

ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த காவலர் பலியானார். 

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு, நாட்டின் பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைப் போல அந்தப் பகுதியிலும் பிறமாநில மக்கள் சகஜமாக சென்று வரவும், சொத்துகளை வாங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஜம்மு-காஷ்மீரில் தங்கியுள்ள வெளிமாநில மக்களை முக்கியமாக வெளிமாநிலத் தொழிலாளா்களை அச்சுறுத்தும் நோக்கில் அவா்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், நேற்று ஸ்ரீநகரில் இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் வெளிமாநிலத் தொழிலாளிகள் இருவரை சுட்டனர். படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரம் பாதுகாப்புப் பணியில் இருந்த 2 மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த காவலர்களை நோக்கியும் தீவிரவாதிகள் சுட்டதில் ஒருவர் உயிரிழத்தாகவும் மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.