சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேகாலயாவில் அடுத்தடுத்து 7 நிலச்சரிவு: இருவர் பலி

மேகாலயாவில் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் அடுத்தடுத்து ஏழு நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

News image
Updated On :5 ஏப்ரல் 2022, 6:54 am

DIN


மேகாலயாவில் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் அடுத்தடுத்து ஏழு நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி இதுவரை 2 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் தங்கள் வீடுகளையும், வாகனங்களையும் இழந்துள்ளனர். ஆங்காங்கு மண் அரிப்பு, சாலைகள் துண்டிப்பு, மின்தடை ஏற்பட்டுள்ளது. 

கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மவ்லத் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ரோஹித் க்ஷியார் (14), திலிபோன் டாங்சங் (35) ஆகிய இருவர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உம்பளை கிராமத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் இரண்டு வீடுகளும், இரண்டு கடைகளும் அடித்துச் செல்லப்பட்டன.

தங்கப்னாய்-மவ்லிங்கோட் சாலையின் ஒரு பகுதி சேதமடைந்து ஒரு வாகனம் அடித்துச் செல்லப்பட்டது. சாலையைச் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. 

லிங்ஷிங் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 வீடுகள் இடிந்துள்ளதுடன், ஒருவருக்கு காயம் அடைந்துள்ளார். 

வாஹிங்டோவில் வஹும்க்ரா நதிக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலையின் ஒரு பகுதியில் அரிப்பு ஏற்பட்டது.

மவ்சின்ராம் பிளாக்கில் உள்ள மவ்ப்லாங் பாலாட் சாலை மற்றும் என்.எச்-40(ஷில்லாங்-டாவ்கி சாலை) ஆகியவற்றில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பொதுத்தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்கள் நிலச்சரிவு காரணமாக சிக்கித் தவித்தனர் ஆனால் சரியான நேரத்திற்கு தங்கள் தேர்வு மையங்களுக்குச் செல்ல காவல்துறை அவர்களுக்கு உதவியது. 

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தானியங்கள், போர்வைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. 

துணை முதல்வர் பிரஸ்டோன் டைன்சாங், நிர்வாக மேலாண்மை குழுவிடம் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.