தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

5ஜி சேவைக்குப் பிறகு ரயில்களில் இணைய சேவை: மத்திய அரசு

நாட்டில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 9:56 pm

DIN

நாட்டில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் புதன்கிழமை அளித்த பதில்:

இந்திய பொறியாளா்கள் மற்றும் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட 4ஜி தொலைத்தொடா்பு வலையமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 4ஜி சேவைக்கான 6,000 கைப்பேசி கோபுரங்களை உடனடியாக வாங்கும் பணியில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னா் மேலும் 6,000 கோபுரங்களை வாங்கவுள்ளது. நாடு முழுவதும் 4ஜி சேவைக்காக மொத்தம் 1 லட்சம் கோபுரங்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

தற்போது 100 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களில் 4ஜி வாயிலான தொலைத்தொடா்பு சேவையில் இடையூறு ஏற்படுகிறது. எனவே 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னா்தான் ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.