விரைவில் முகக்கவசத்திற்கு விலக்கு: கோவா முதல்வர்

கோவாவில் விரைவில் முகக்கவசத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்புள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பிரமோத் சாவந்த்
பிரமோத் சாவந்த்
Updated on
1 min read

கோவாவில் விரைவில் முகக்கவசத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்புள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கோவாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 41ஆக உள்ளது.

இந்நிலையில், கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் முகக்கவசத்திற்கு விலக்கு அளிக்கப்படுமா என்ற செய்தியாளர் கேள்விக்கு முதல்வர் சாவந்த் அளித்த பதில், “முகக்கவசத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிடுவார்” என்றார்.

முன்னதாக, பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் வசூலிக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com