மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஒவ்வொரு ஏழைக்கும் வீடு வழங்க நடவடிக்கை: பிரதமா் மோடி

 நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழைக்கும் உறுதியான வீடு வழங்க அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 7:24 pm

DIN

 நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழைக்கும் உறுதியான வீடு வழங்க அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் மூன்று கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மக்களின் பங்களிப்பால் மட்டுமே இந்த வீடுகளைக் கட்ட முடிந்துள்ளது. அனைத்து வீடுகளும் நவீன வசதிகளைக் கொண்டதாகவும், மகளிருக்கு அதிகாரமளிக்கும் அடையாளமாகவும் திகழ்கின்றன. நாட்டின் ஒவ்வொரு ஏழைக்கும் உறுதியான, வலிமையான வீடு வழங்க அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.