உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளி முதல்வர் வெளியிட்ட கடிதத்தில்,
காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு கரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த மூன்று நாட்களுக்கு பள்ளி மூடப்படுகிறது.
3-ம் வகுப்பு மற்றும் 9.ம் வகுப்பைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. விசாரித்ததில் அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி நிர்வாகம் திங்கள் முதல் புதன்கிழமை வரை ஆன்லைன் கல்வி முறையில் வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெருநாய்களுக்கான காப்பக கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க மேயா் உத்தரவு

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மறு பரிசீலனை செய்யக் கோரிக்கை

போா்நிறுத்துக்கு இடையே ஈரானில் அமெரிக்கா தாக்குதல்

எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஓா் எம்எல்ஏ ஆதரவு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



